வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பு இன்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து அப்படத்தின் விதிமீறல்களைச் சுட்டிக் காட்டினர். இந்தப் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் அருகேயும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் டிஜிபியிடம் வலியுறுத்தினர். புகாரைப் கேட்ட டிஜிபி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த படத்தை பார்த்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் திருமணம் ஆகாத பசங்க அம்மா அப்பா முன்னாடி புகை பிடிப்பது, மது அருந்துவது என்பது நமது நாட்டை பொறுத்தவரை மரியாதை குறைவான செயலென்று கருதபடுகிறது. இதுவரை திரைப்படங்களில் புகைபிடித்த சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் யாரும் அம்மா அப்பா இருக்கும்போது புகை பிடிப்பது போல் காட்சிகளை அமைத்ததில்லை. ஆனால் இந்த படத்தில் தனுஷ், அவரது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருக்கும்போதே புகை பிடித்து கொண்டிருக்கிறார். இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்கிறார் அந்த வங்கி அதிகாரி. தமிழ் நாட்டை பொறுத்தவரை ஹீரோகளுக்கென்று தனி மரியாதை உள்ளது. வில்லன்கள் செய்யும் காரியங்களை எல்லாம் ஹீரோ செய்ய ஆரம்பித்தால், அதை பார்க்கும் இளஞர்கள் தடம் மாற வாய்ப்புள்ளது. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஆனால் அவைகளை கைவிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை என்கிறார் அவர். இந்த மாதிரி விஷங்களில் தணிக்கை துறைக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தாலும் அதை கடைபிடிக்காமலிருப்பது வருத்தம் அளிக்கிறது என்கிறார் அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
கேரள அரசின் 2013 வருட திரைப்பட விருது தேர்வுக் குழுவின் தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டிருந்தார். 2013 வருடத்தின் சிறந்த படமாக சுதேவனின் சிஆர் 89 படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இரண்டாவது படமாக நார்த் 24 காதம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக பகத் பாசிலும், லாலும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு சுராஜ் வெஞ்சரமூடு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் "பேரறியாதவர்" என்ற படத்தை தயாரித்த அனில் குமார் என்பவர் தேர்வுக்குழுவினர் பரிசீலனைக்கு 85 படங்கள் வந்ததாகவும், இந்தப் படங்கள் எல்லாவற்றையும் 10 நாட்களுக்குள் பார்த்து விருதுகளை அறிவிக்கபட்டதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 10 நாட்களில் 85 படங்களை எப்படி பார்க்க முடியும். அனைத்துப் படங்களையும் பார்க்காமலேயே விருதுகளை அறிவித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் பாரதிராஜா உள்ளிட்ட 7 தேர்வுக் குழுவினருக்கும் பத்து தினங்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு மூலகாரணமே டைரக்டர் பாரதி ராஜா தலைமையிலான திரைப்பட விருது தேர்வுக் குழு நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவை சிறந்த நகைச்சுவை நடிகராக தேர்வு செய்ததுதான். கேரள அரசின் விருது அறிவிக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்புதான் பேரறியாதவர் படத்துக்காக சுராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார். தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற சுராஜுக்கு சிறந்த காமெடி நடிகனுக்கான விருதை அளித்து சிறுமைப்படுத்திவிட்டது என வருத்தபடுகிறார் பேரறியாதவர் படத்தை இயக்கிய டாக்டர் பைஜு.
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பட அதிபர்கள் கே.முரளிதரன், அன்பு செழியன், மதன், கே.எஸ்.சிவராமன், டைரக்டர்கள் பார்த்திபன், விஜய், சசி, விக்ரம்குமார், கோகுல், பொன்ராம், வசனகர்த்தா பிருந்தாசாரதி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, நடிகர்கள் மனோபாலா, சூரி ஆகியோரும் பேசினார்கள்.
இசைப்புயலுக்கு முனைவர் பட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்க்கனவே நான்கு முறை முனைவர் பட்டம் வாங்கி உள்ளார். ஆனால் உலகின் தலை சிறந்த ஒரு இசைக்கல்லூரி தமக்கு முனைவர் வழங்குவது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர்கள் உயிரிழந்த நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவிருக்கும். இது ஒரு அசாதாரணமான நிகழ்வுதான். எங்கயோ எப்போதோ நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் இது திரைப்படத்துறையினரை மிகவும் பாதித்துள்ளது. சமீபத்தில் ஒரு நான்கு மாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் “பிறவி” என்ற படத்தின் காட்சிகளை படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் சஞ்சீவ். அப்போது அந்த கட்டிடம் லேசாக ஆடுவதுபோல் அவருக்கு தோன்றி இருக்கிறது. அன்றைய படபிடிப்பு முடிந்து வெளியே வரும்போது அவருக்கு லேசாக தலையும் சுற்றியுள்ளது. அடுத்த நாள் படபிடிப்புக்காக அங்கு சென்ற போது அந்த நான்கு மாடி கட்டிடம் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதுபோல் அவருக்கு தோன்றி இருக்கிறது. அதிர்ச்சி அடைந்த இயக்குனர் படபிடிப்பை ரத்து செய்துவிட்டு “எப்படித்தான் ஒன்றுமே நடக்காதது போல் மக்கள் அங்கு குடியருக்கிரார்களோ தெரியவில்லை” என்று ஆதங்க பட்டுள்ளார். இனி படத்தயாரிப்பாளர்கள் அடுக்கு மாடி கட்டிடங்களில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுமுன் நல்ல கட்டிட பொறியாளரையும் கூட வைத்திருப்பது நல்லது என்று தோன்றுகிறது.
செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா..... |