தேசிய விருது கலைஞ்சர்கள் தனுஷ் மற்றும் வெற்றி மாறன் இணைந்து தயாரித்துள்ள காக்கா முட்டை படம் டொரண்டோ சர்வதேசப் பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் இயக்கத்தில், புதுமுகம் பேபி ஆன்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கத்தில், புதுமுகம் பேபி ஆன்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் காக்கா முட்டை. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் 2011-ல் வெளியான ஆடுகளம் படம் ஏற்கெனவே இந்த சர்வதேசப் பட விழாவில் பங்கேற்றது நினைவிருக்கலாம்.
“வேலை இல்லா பட்டதாரி” படத்தின் தனுஷ் புகை பிடிக்கும் போஸ்டர் விவகாரம் இன்னமும் முடிவடையாமல் இருக்கும் நிலையில் அந்த படத்தில் வரும் ஒரு வசனம் மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில், தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தன்னை படிக்க வைத்ததால்தான் வேலை கிடைக்கவில்லை என்றும், தம்பியை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்க வைத்ததால் வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவது போல் வசனம் உள்ளது. இதற்க்கு ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக்தினரும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகா சார்பில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. இதற்கிடையே தனுஷ் கைது செய்யபட்டுவிட்டார் என்ற வதந்தியும் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார். எப்படியோ இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிவடைகிறதோ இல்லையோ படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது என்பதுதான் உண்மை.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பு இன்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து அப்படத்தின் விதிமீறல்களைச் சுட்டிக் காட்டினர். இந்தப் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் அருகேயும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் டிஜிபியிடம் வலியுறுத்தினர். புகாரைப் கேட்ட டிஜிபி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த படத்தை பார்த்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் திருமணம் ஆகாத பசங்க அம்மா அப்பா முன்னாடி புகை பிடிப்பது, மது அருந்துவது என்பது நமது நாட்டை பொறுத்தவரை மரியாதை குறைவான செயலென்று கருதபடுகிறது. இதுவரை திரைப்படங்களில் புகைபிடித்த சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் யாரும் அம்மா அப்பா இருக்கும்போது புகை பிடிப்பது போல் காட்சிகளை அமைத்ததில்லை. ஆனால் இந்த படத்தில் தனுஷ், அவரது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருக்கும்போதே புகை பிடித்து கொண்டிருக்கிறார். இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்கிறார் அந்த வங்கி அதிகாரி. தமிழ் நாட்டை பொறுத்தவரை ஹீரோகளுக்கென்று தனி மரியாதை உள்ளது. வில்லன்கள் செய்யும் காரியங்களை எல்லாம் ஹீரோ செய்ய ஆரம்பித்தால், அதை பார்க்கும் இளஞர்கள் தடம் மாற வாய்ப்புள்ளது. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஆனால் அவைகளை கைவிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை என்கிறார் அவர். இந்த மாதிரி விஷங்களில் தணிக்கை துறைக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தாலும் அதை கடைபிடிக்காமலிருப்பது வருத்தம் அளிக்கிறது என்கிறார் அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
|