‘கத்தி’ படத்தின் முதல்நாள் வசூல் தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னக அளவில் சாதனை படைத்துள்ளது.
இதுவரை யாருமே கையில் எடுக்காத ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து ‘கத்தி’ படம் எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழக கிராம மக்களின் வாழ்வாதமாரமாக இருந்து கடந்த சில வருடங்களில் கண்ணுக்கு எட்டாத ஆழம் சென்றுவிட்ட நிலத்தடி நீர்தான் கத்தி படத்தின் மைய கரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை ஆபாச வசனம் இல்லை. புகைபிடிக்கும் கட்சி இல்லை மது அருந்தும் காட்சியும் இல்லை. இருப்பினும் படத்தை பார்ப்பவர்களை இருக்கையின் விளும்பில் உட்காரவைத்து விடுகிறது ‘கத்தி’. தமிழின விரோதிகளால் தயாரிக்கப்பட்ட படம் கத்தி. இதை தமிழ்நாட்டில் வெளியிடமாட்டோம் என்று சில அமைப்புகள் போராடின. சில திரை அரங்குகள் அடித்து நொறுக்க பட்டன. படத்தின் கதை என்னுடையது என்று கூறி படத்தை திரையிடாமல் இருக்க முயற்சிகள் செய்யப்பட்டன. படத்தின் டோரண்டை முகநூல்களில் வெளியிட்டு திரை அரங்குகளில் மக்கள் படத்தை பார்க்காமலிருக்க கீழ்த்தரமான வேலைகள் செய்யப்பட்டன. இருப்பினும் எல்லா தடைகளையும் மீறி குறித்த தேதியில் வெளியாகி, தென்னிந்தியாவில் எந்த ஒரு மொழி திரைப்படமும் இதுவரை கண்டிராத வசூலை முதல் இரண்டு நாளில் பெற்றுத்தந்தது கத்தி. விஜய் தமிழ் திரை உலகுக்கு ஒரு புதிய மரியாதையும் புகழையும் பெற்று தந்துவிட்டார் என்றால் அது மிகை ஆகாது அரசியல் வாதிகளால் குடிசை வாழ் மக்கள் எப்படி ஏமாற்றபடுகிறார்கள், அவர்களின் உணர்வுகள் எப்படி அரசியலாக்கப்படுகிறது என்பதை அரசியல் கலந்து ரசனை மிக்க சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். வட சென்னையின் யதார்த்த மனிதர்களின் வீடு, வாழ்க்கை, விளையாட்டு, திறமை, காதல், அன்பு, வன்மம், அரசியல் என்று பயணிக்கும் படத்தை உண்மைத்தன்மையோடு மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்தப்படம் கார்த்தி க்கு ஒரு ஸ்பெசல் படம்தான், அப்படியே ஒட்டி விடுகிறார். யதார்த்தமான பக்கத்துவீட்டு பையனாகவும் , நண்பனுக்காக கோபப்படும் இடங்களிலும் வாழ்ந்திருக்கிறார். எந்தவித பந்தா பரபரப்பு இல்லாமல் வெளியாகி அனைவரது மனதையும் கவர்திளுக்கும் படம் மெட்ராஸ்.
விமர்சனத்தை பார்க்க பாடல்களை கேட்க தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் டீஸரும், டிரைலரும் தான் இதுவரை நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. இப்படத்தின் டீஸரை 48 லட்சம் பேரும், டிரைலரை 46 லட்சம் பேரும் பார்த்திருக்கிறார்கள். தற்போது ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் டீஸர் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி இதுவரை 49 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து முந்தைய படங்களின் பல டீஸர் ரெக்கார்டுகளை உடைத்தெறிந்திருக்கிறது. விஜய் நடித்த தலைவா படத்தின் டிரைலரை 34 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். சமீபத்தில் ரிலீஸான ‘அஞ்சான்’ படத்தின் டீஸரையும் 34 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அஜித் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா 2’ படத்தின் டீஸரை இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘ஐ’ படத்தின் டீஸருக்கு போட்டியாக தற்போது களத்தில் இறங்கி இருப்பது விஜய் நடித்த கத்தி படத்தின் டீஸர்தான். இந்த படத்தின் டீஸர் வெளியாகி இரண்டு நாட்களுக்குள் 11 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. ‘ஐ’ பட சாதனையை விஜய் நடித்த கத்தி முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டவுடனே இந்த படம் மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துவிட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட ‘ஐ’ படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். படத்தில் பல வெளிநாட்டுக் கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆகிய இந்திய மொழிகள் தவிர உலகின் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அடென்போரோ
(29ஆகஸ்ட்1923 - 24ஆகஸ்ட்2014) நேற்று காலமானார். ‘காந்தி’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவர், இந்த படத்திற்காக இரண்டு அகடமி விருதுகள் பெற்றவர். மேலும் நான்கு பாப்டா விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள் பெற்றிருக்கிறார். நடிகராக இவர் நடித்த ‘பிரைட்டன் ராக்’, ‘தி கிரேட் எஸ்கேப்’, ’10 ரிலிங்டோன் பிளேஸ்’ ‘மிரக்கில் ஆன் 34த் ஸ்ட்ரீட்’ மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத அளவு பதிந்தவை. ஆரம்ப காலத்தில் இரண்டாம் உலகபோரின் போது ராயல் விமான படையில் விமானியாக தனது வாழ்கையை ஆரம்பித்த ரிச்சர்ட் அடென்போரோ, தனது திரைப்பட வாழ்க்கையை 1942 ல் ‘இன் விச் வி சர்வ்’ என்ற படத்தில் மாலுமியாக நடித்து ஆரம்பித்தார். 1947 ல் ‘பிரைட்டன் ராக்’ என்ற படத்தில் இவர் நடித்த பிங்கி பிரவுன் என்ற வேடம் இவரது திரை வாழ்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1949ல், இவர், பிரிட்டனின் ஆறாவது சிறந்த வசூல் நடிகராக தேர்ந்தெடுக்கபட்டார். 1983 ல், இந்தியா, இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது. ரிச்சர்ட் அடென்போரோவின் படங்களின் பட்டியலை பார்க்க. இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' உலக அளவில் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியான கிரிக்கெட் சார்ந்த படங்களில் சிறந்த 5 தருணங்கள் என பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான 'தி கார்டியன்' வெளியிட்டுள்ள பட்டியலில், வெங்கட் பிரபுவின் சென்னை-28 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தைப் பற்றி தி கார்டியனில், "காதல், நட்பு மற்றும் கிரிக்கெட்டைப் பற்றிய வெங்கட்பிரபுவின் இந்த முதல் திரைப்படத்தில், படத்தின் முக்கியப் பாத்திரம் ஒன்று, எதிரணியினரின் பகுதிக்கு குடிபெயர்ந்து செல்லும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து 'லகான்' மற்றும் 'சென்னை-28' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பது ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான 'தி லேடி வேனிஷஸ்' என்ற திரைப்படம். ஹிட்ச்காக் படத்தோடு, தன்னுடைய திரைப்படமும் பட்டியலில் இணைந்திருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துகொண்டுள்ளார் வெங்கட் பிரபு.
theguardian
தேசிய விருது கலைஞ்சர்கள் தனுஷ் மற்றும் வெற்றி மாறன் இணைந்து தயாரித்துள்ள காக்கா முட்டை படம் டொரண்டோ சர்வதேசப் பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் இயக்கத்தில், புதுமுகம் பேபி ஆன்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கத்தில், புதுமுகம் பேபி ஆன்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் காக்கா முட்டை. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் 2011-ல் வெளியான ஆடுகளம் படம் ஏற்கெனவே இந்த சர்வதேசப் பட விழாவில் பங்கேற்றது நினைவிருக்கலாம்.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை சூர்யாவின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத ஆரம்ப வசூல் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் தமிழகம், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரசிகர்கள் படம் பார்க்க அலைமோதினர். முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 11.5 கோடி இந்தப் படத்துக்கு ஆரம்ப வசூலாகக் கிடைத்துள்ளது. 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் 3 நாளில் இவ்வளவு வசூல் ஈட்டியது இல்லை. இப்படத்தின் வசூல் சென்னையில் மட்டும் ரூ. 2,35,93,522 கோடி. இந்த வருடத்தில், படம் வெளியான முதல் வாரத்தில், அதிக வசூல் செய்த படம் இது தான். சென்னையில் இதற்கு அடுத்தபடியாக வசூல் செய்த படங்கள்:
1. கோச்சடையான் ₹ 180,88,214 2. வேலையில்லா பட்டதாரி ₹ 167,75,253 3. மான் கராத்தே ₹ 141,41,844 4. ஜில்லா ₹ 132,45,910 5. வீரம் ₹ 123,31,018 ஒரு படத்தின் முதல் வார வசூல், மக்களிடையே அந்த படநாயகனுக்கு இருக்கும் பிரபலத்தை பிரதிபலிக்கும் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதன்படி பார்த்தல் தமிழ் மக்களின் நம்பர் ஒன் நட்சத்திரம் சூரியாதான் என்பது நிருபணமாகி உள்ளது. |