இதுவரை யாருமே கையில் எடுக்காத ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து ‘கத்தி’ படம் எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழக கிராம மக்களின் வாழ்வாதமாரமாக இருந்து கடந்த சில வருடங்களில் கண்ணுக்கு எட்டாத ஆழம் சென்றுவிட்ட நிலத்தடி நீர்தான் கத்தி படத்தின் மைய கரு
படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை ஆபாச வசனம் இல்லை. புகைபிடிக்கும் கட்சி இல்லை மது அருந்தும் காட்சியும் இல்லை. இருப்பினும் படத்தை பார்ப்பவர்களை இருக்கையின் விளும்பில் உட்காரவைத்து விடுகிறது ‘கத்தி’.
தமிழின விரோதிகளால் தயாரிக்கப்பட்ட படம் கத்தி. இதை தமிழ்நாட்டில் வெளியிடமாட்டோம் என்று சில அமைப்புகள் போராடின. சில திரை அரங்குகள் அடித்து நொறுக்க பட்டன. படத்தின் கதை என்னுடையது என்று கூறி படத்தை திரையிடாமல் இருக்க முயற்சிகள் செய்யப்பட்டன. படத்தின் டோரண்டை முகநூல்களில் வெளியிட்டு திரை அரங்குகளில் மக்கள் படத்தை பார்க்காமலிருக்க கீழ்த்தரமான வேலைகள் செய்யப்பட்டன. இருப்பினும் எல்லா தடைகளையும் மீறி குறித்த தேதியில் வெளியாகி, தென்னிந்தியாவில் எந்த ஒரு மொழி திரைப்படமும் இதுவரை கண்டிராத வசூலை முதல் இரண்டு நாளில் பெற்றுத்தந்தது கத்தி.
விஜய் தமிழ் திரை உலகுக்கு ஒரு புதிய மரியாதையும் புகழையும் பெற்று தந்துவிட்டார் என்றால் அது மிகை ஆகாது