தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் டீஸரும், டிரைலரும் தான் இதுவரை நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. இப்படத்தின் டீஸரை 48 லட்சம் பேரும், டிரைலரை 46 லட்சம் பேரும் பார்த்திருக்கிறார்கள். தற்போது ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் டீஸர் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி இதுவரை 49 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து முந்தைய படங்களின் பல டீஸர் ரெக்கார்டுகளை உடைத்தெறிந்திருக்கிறது. விஜய் நடித்த தலைவா படத்தின் டிரைலரை 34 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். சமீபத்தில் ரிலீஸான ‘அஞ்சான்’ படத்தின் டீஸரையும் 34 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அஜித் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா 2’ படத்தின் டீஸரை இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘ஐ’ படத்தின் டீஸருக்கு போட்டியாக தற்போது களத்தில் இறங்கி இருப்பது விஜய் நடித்த கத்தி படத்தின் டீஸர்தான். இந்த படத்தின் டீஸர் வெளியாகி இரண்டு நாட்களுக்குள் 11 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. ‘ஐ’ பட சாதனையை விஜய் நடித்த கத்தி முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாயின. இதை கத்தி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இருந்தே மறுத்து வந்தார். இதன் பிறகு அடங்கியிருந்த இந்த பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. “தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் சிலர் விஜய்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் என்று படம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நேரத்தில், இப்பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து தமிழர் அமைப்புகளைச் சந்தித்துப் வருகிறார். இதுவரை பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகியோரைச் சந்தித்து உரிய விளக்கங்களை அளித்துள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தமிழர் அமைப்புகளைச் சந்தித்து ஏ.ஆர்.முருகதாஸ் என்ன பேசினார்கள், தமிழர் அமைப்புகள் என்ன முடிவு எடுத்திருக்கின்றன போன்ற விவரங்கள் தெரியாத நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, எங்களது முடிவை நாங்கள் இன்னும் கூறவில்லை என்றும் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான், ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்களிப்பு இருக்குமேயானால் எனக்கு தகவல் வந்திருக்கும். ‘கத்தி’ படம் குறித்து இதுவரை யாரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு தவறான தகவலும் வரவில்லை. அப்படியிருக்க அப்படத்தை எதிர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. ஒருவேளை ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்கு இருப்பதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால் எதிர்ப்பை தெரிவிப்போம்’’ என்றார்.
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், சீமான், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கலைப்புலி தாணு, டி சிவா, மனோபாலா, நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ் உள்பட பலரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு ... |