இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் சிங்கபூர் சென்ற விஜயகாந்த் நேற்று சென்னை திரும்பினார். ஒரு அறுவை சிகிச்சைக்காக அவருடைய மனைவி மற்றும் மைத்துனருடன் சிங்கபூர் சென்றிருந்தார் என்று முன்னதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று Silk Air flight MI 436 விமானத்தில் வந்த இறங்கிய விஜயகாந்த்துக்கு சக்கர நாற்காலி கேட்கப்பட்டதாகவும் அதில் அவரை போர்வையால் மூடி அவசர அவசரமாக அழைத்து சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வீடு திருப்பிய விஜயகாந்த் கட்சியின் மூத்த தலைவர்களுடனும் மற்றும் சில சட்ட மன்ற உறுப்பினர்களுடனும் பேசினதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டும் மேடைகளில் உலா வர நமது விருப்பத்தை தெரிவித்துகொள்வோம். செய்தியின் முழு விவரத்தை பார்க்க....... |
1 Comment
|