இசை பிரியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் காவிய தலைவன் பட பாடல்களில் ஓன்று முன்னோட்டமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கவிஞர் பா.விஜய் எழுதி முகேஸ் பாடிய “ஓ உலகமே யுத்தம் எதற்கு?” என்ற இந்த பாடல் தற்போதைய உலக சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் என்று பாடலின் இசை அமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். உள்ளத்தை உருக்கும் இந்த பாடல் உடனடியாக இசை ரசிகர்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்துவிட்டது. |
0 Comments
|