தமிழ் திரைப்படங்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை நடிக்க தடை செய்ய வேண்டும் என்று கோரி முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் இப்படி ஒரு வழக்கு இதுவரை தொடரப்பட்டதில்லை என்பதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துலட்சுமி தாக்கல் செய்த மனுவில் இளம் பெண்களை இப்போது சினிமாக்களில் அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள். ஆனால், இளம் பெண்களை படத்தில் நடிக்க வைக்கக் கூடாது. தமிழ் படங்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் துளசி, லட்சுமி மேனன், சந்தியா, கார்த்திகா ஆகியோர் 18 வயது பூர்த்தியடையாதவர்கள். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக் காட்சியிலும் நடிக்க வைக்கப்படுகிறார்கள். பெண்களை தவறாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்திற்கு கீழ், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தமிழத் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள துளசி, கார்த்திகா ஆகிய இருவரும் முன்னாள் நடிகை ராதாவின் மகள்கள். |