“வேலை இல்லா பட்டதாரி” படத்தின் தனுஷ் புகை பிடிக்கும் போஸ்டர் விவகாரம் இன்னமும் முடிவடையாமல் இருக்கும் நிலையில் அந்த படத்தில் வரும் ஒரு வசனம் மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில், தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தன்னை படிக்க வைத்ததால்தான் வேலை கிடைக்கவில்லை என்றும், தம்பியை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்க வைத்ததால் வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவது போல் வசனம் உள்ளது. இதற்க்கு ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக்தினரும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகா சார்பில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. இதற்கிடையே தனுஷ் கைது செய்யபட்டுவிட்டார் என்ற வதந்தியும் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார். எப்படியோ இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிவடைகிறதோ இல்லையோ படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது என்பதுதான் உண்மை.