சென்னை முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர்கள் உயிரிழந்த நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவிருக்கும். இது ஒரு அசாதாரணமான நிகழ்வுதான். எங்கயோ எப்போதோ நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் இது திரைப்படத்துறையினரை மிகவும் பாதித்துள்ளது. சமீபத்தில் ஒரு நான்கு மாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் “பிறவி” என்ற படத்தின் காட்சிகளை படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் சஞ்சீவ். அப்போது அந்த கட்டிடம் லேசாக ஆடுவதுபோல் அவருக்கு தோன்றி இருக்கிறது. அன்றைய படபிடிப்பு முடிந்து வெளியே வரும்போது அவருக்கு லேசாக தலையும் சுற்றியுள்ளது. அடுத்த நாள் படபிடிப்புக்காக அங்கு சென்ற போது அந்த நான்கு மாடி கட்டிடம் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதுபோல் அவருக்கு தோன்றி இருக்கிறது. அதிர்ச்சி அடைந்த இயக்குனர் படபிடிப்பை ரத்து செய்துவிட்டு “எப்படித்தான் ஒன்றுமே நடக்காதது போல் மக்கள் அங்கு குடியருக்கிரார்களோ தெரியவில்லை” என்று ஆதங்க பட்டுள்ளார். இனி படத்தயாரிப்பாளர்கள் அடுக்கு மாடி கட்டிடங்களில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுமுன் நல்ல கட்டிட பொறியாளரையும் கூட வைத்திருப்பது நல்லது என்று தோன்றுகிறது.
செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா.....
செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா.....