வாஷிங்டனிலுள்ள உலகின் தலைசிறந்த இசை ஆய்வு நிறுவனமான பெர்க்லி இசைக்கல்லூரி ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது. இசை துறையில் கடந்த இருபது வருடங்களாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆற்றிய சாதனைகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி அவர் பெயரில் இசை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் ஆரம்பிக்க படும் என்று பெர்க்லி இசைக்கல்லூரியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க விழா வரும் 24-10-2014 அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் அந்த கல்லூரியில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பாடம் எடுப்பார் என்றும் மேலும் அந்த கல்லூரியின் நடைமுறைகளை ஆய்வு மேற்கொள்ளுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இசைப்புயலுக்கு முனைவர் பட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்க்கனவே நான்கு முறை முனைவர் பட்டம் வாங்கி உள்ளார். ஆனால் உலகின் தலை சிறந்த ஒரு இசைக்கல்லூரி தமக்கு முனைவர் வழங்குவது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.