| தமிழ் திரைப்பட உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் ஒரு தலை ராகம். பெரிய நட்சத்திரங்கள் மற்றும் ஆடல் பாடல் இருந்தால்தான் படம் ஓடும் என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்த படம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகி ரூபா நாயகன் சங்கரை (கடேசியல் ஒரு காட்சியை தவிர) தொட்டதும் கிடையாது அவரிடம் பேசினதும் கிடையாது. கதாநாயகி ரூபாவுக்கு படத்தில் பாடலே கிடையாது. இருப்பினும் வசூலில் ஒரு பெரிய சாதனையை படைத்தது. தமிழ் திரைப்பட ரசிகர்கள் எப்படி இந்த படத்தை மறக்காமல் இருக்கிறார்களோ அதேபோல் இந்த படத்தில் நாயகன் சங்கரும் இந்த படத்தை மறக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு தலை ராகத்தில் நாயகன் சங்கர் தமிழ் மலையாளம் என்று 120 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் 'மணல் நகரம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இந்த விழாவிற்கு 'ஒருதலை ராகம்' படக்குழுவினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா,நடிகர்கள் தியாகு,தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன் ,பி.ஆர்.ஓ.டைமண்ட் பாபு என ஒருதலைராகம் படக்குழுவினர் அனைவரும் விழாவுக்கு வந்து மேடையை அலங்கரித்தனர். சங்கர் பேசும்போது ''நான்'ஒருதலை ராகம்' படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் 'ஒருதலை ராகம்'சங்கர் தான். அந்தப்படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன் என்று கூறினார். ஹைதராபாத்தியிருந்து வந்திருந்த நாயகி ரூபா 'மணல் நகரம்' படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நம்மை மீண்டும் இணைத்துள்ளது. இதன் வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம். அதற்காகவாவது இந்தப்படம் ஓட வேண்டும்.''என்றார். |
0 Comments
(2007, 2009, 2010) விஜய் சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் இரண்டு முறைகள் (2011, 2012) தென் இந்திய பன்னாட்டு திரைப்பட விருதுகளையும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். தினமும் புது புது பாடலாசிரியர்கள் தோன்றும் இந்த காலத்தில் 2013 ல் 34 படங்களில் 106 பாடல்கள் எழுதிஇருப்பது இவரது திறைமைக்கு மேலும் பொலிவூட்டும் ஒரு பெரிய சாதனைதான்.
கடந்த காங்கிரஸ் மத்திய அரசால் திரைப்பட தயாரிப்புகளின் மேல் பல வகைகளில் போடப்பட்ட 12.5% சேவை வரி இந்த பட்ஜெட்டில் முழுமையாக நீக்க படும் அல்லது பெரிய அளவில் குறைக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். “மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய திரைப்பட தொழிலுக்கு சல்மான் கான், விஜய், பவன் கல்யான், ஹேமமாலினி போன்றோர்கள் நிவாரணம் பெற்று தர தவறி விட்டார்கள்” என்று சென்னையிலுள்ள முகேஷ் ரதிலால் மேஹ்த்தா என்று திரைப்பட தயாரிப்பாளர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக முந்திய பட்ஜெட்டில் சேவை வரி பற்றிய விவரம் தெரிந்த உடன் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை 7-2-2013 அன்று நடத்தினர். அதை தொடர்ந்து 23-2-2013 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொண்டனர். எந்த பயனும் கிடைக்க வில்லை. ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திரு நரேந்திர மோடி அவர்கள் திரைப்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நல்ல தொடர்பில் இருந்ததால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்தது.
தமிழ் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிடுவதில் புதிய சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறார்கள். முழுமையாக தயாரிக்கப்பட்டு படம் வெளியாகும் தேதியை அறிவித்த பின்னரும் அந்த தேதியில் வெளியிடமுடியாமல் தற்போது தவித்து கொண்டிருக்கிறார்கள். இதற்க்கு சென்னையிலுள்ள மண்டல திரைப்படத் தணிக்கை அலுவலகத்தில் உறுப்பினர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்படுகிறது. 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இந்த தணிக்கை குழுவில் தற்போது 7 உறுப்பினர்கள்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்தை தணிக்கை செய்வதற்கு இரண்டு ஆண் உறுப்பினர்களும் இரண்டு பெண் உறுப்பினர்களும் தேவை. ஆனால் தற்போதுள்ள ஏழு உறுப்பினர்களில் இரண்டு பேர்தான் பெண்கள். ஆகவே இந்த இரண்டு பேர்களும் எல்லா படத்தையும் பார்க்க வேண்டியதுள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு படம்தான் தணிக்கை செய்ய முடிகிறது என்று சென்னை மண்டல திரைப்படத் தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தற்போது 12 தமிழ் படங்கள் தணிக்கைக்காக காத்திருக்கிறது. இதில் வேலை இல்லா பட்டதாரி, சரபம் மற்றும் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் போன்ற படங்களும் அடங்கும்.
|