சரவணன் மீனாட்சி எனும் நெடுந்தொடரில் கடந்த ஆறு வருடங்களாக முக்கிய வேடத்தில் நடித்து வந்த நடிகர்கள் செந்தில் - ஸ்ரீஜா கடந்த ஜூன் 2 ல் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாகி கொண்டார்கள். சில வருடங்களுக்கு முன்னதாக சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் இவர்களது திருமண காட்சி படம் பிடிக்கபட்டபோது அதை பார்க்க இவர்களது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கபட்டிருந்தது. திரளாக வந்திருந்த ரசிகர்கள் படபிடிப்பை பார்த்து விட்டு உங்களது ஜோடி பொருத்தம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் உண்மையிலேயே நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளகூடாது என்று கேட்டார்களாம். அப்போது மனதில் துளிர் விட்ட ஆசை இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது என்று செந்தில் கூறியுள்ளார். மிகவும் எளிமையாக யாரையும் அழைக்காமல் திருப்தியில் நடந்த இவர்களது திருமணம் இருவரது பெற்றோர்களின் சம்மதத்தோடுதான் நடந்தது என்று செந்தில் விளக்கமளித்துள்ளார். |