கடந்த 2009 ல் ஈழப்போரின் கடேசிகட்டதில் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன், கைதியாக பிடிக்கப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த படுபாதக செயலைகண்டு அன்று உலகமே அதிர்ச்சியில் மூழ்கியது. மேலும் இந்த ஈனத்தனமான செயலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தன. ஆனால் இந்தியாவில் இந்த செயல் குறித்து பெரிதாக எந்த எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக இங்குள்ள தயாரிப்பாளர்கள் ஈழப்போராளிகளை கொச்சைபடுத்திதான் திரைப்படம் எடுத்து வந்தனர். இப்படியொரு சூழலில் முதன் முதலாக தைரியமாக இயக்குனர் பிரவீன் காந்தி, புலிப்பார்வை என்ற படத்தை, பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலையை மையப்படுத்தி எடுத்திருக்கிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் பிரவீன் காந்தி கூறும்போது கைதுசெய்யப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யபடுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் தம்மை வெகுவாக பாதித்தது என்றார். சில நிமிடங்களில் கொல்லப்பட்டு விடுவோம் என்று தெரிந்தும் அதை பற்றி சிறிதளவும் கவலையோ பயமோ இல்லாமல் அலட்சியமாக கொலைகாரர்களை பார்க்கும் பார்வை அசாதாரணமானது என்றார். இந்த பார்வைதான் என்னை பாலச்சந்திரனை பற்றி திரைப்படம் எடுக்க தூண்டியது என்றும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்தார். ஈழ தமிழர்களை பற்றிய திரைப்படங்கள் என்றாலே கண்களில் விளக்கெண்ணையை போட்டு பார்க்கும் தணிக்கை துறையும் புலிப்பார்வை படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இயக்குனர் பிரவீன் காந்திக்கும் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதனுக்கும் முதலிலேயே நமது வாழ்த்துகளை தெரிவித்துவிடுவோம். |
0 Comments
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பட அதிபர்கள் கே.முரளிதரன், அன்பு செழியன், மதன், கே.எஸ்.சிவராமன், டைரக்டர்கள் பார்த்திபன், விஜய், சசி, விக்ரம்குமார், கோகுல், பொன்ராம், வசனகர்த்தா பிருந்தாசாரதி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, நடிகர்கள் மனோபாலா, சூரி ஆகியோரும் பேசினார்கள்.
இசைப்புயலுக்கு முனைவர் பட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்க்கனவே நான்கு முறை முனைவர் பட்டம் வாங்கி உள்ளார். ஆனால் உலகின் தலை சிறந்த ஒரு இசைக்கல்லூரி தமக்கு முனைவர் வழங்குவது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர்கள் உயிரிழந்த நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவிருக்கும். இது ஒரு அசாதாரணமான நிகழ்வுதான். எங்கயோ எப்போதோ நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் இது திரைப்படத்துறையினரை மிகவும் பாதித்துள்ளது. சமீபத்தில் ஒரு நான்கு மாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் “பிறவி” என்ற படத்தின் காட்சிகளை படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் சஞ்சீவ். அப்போது அந்த கட்டிடம் லேசாக ஆடுவதுபோல் அவருக்கு தோன்றி இருக்கிறது. அன்றைய படபிடிப்பு முடிந்து வெளியே வரும்போது அவருக்கு லேசாக தலையும் சுற்றியுள்ளது. அடுத்த நாள் படபிடிப்புக்காக அங்கு சென்ற போது அந்த நான்கு மாடி கட்டிடம் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதுபோல் அவருக்கு தோன்றி இருக்கிறது. அதிர்ச்சி அடைந்த இயக்குனர் படபிடிப்பை ரத்து செய்துவிட்டு “எப்படித்தான் ஒன்றுமே நடக்காதது போல் மக்கள் அங்கு குடியருக்கிரார்களோ தெரியவில்லை” என்று ஆதங்க பட்டுள்ளார். இனி படத்தயாரிப்பாளர்கள் அடுக்கு மாடி கட்டிடங்களில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுமுன் நல்ல கட்டிட பொறியாளரையும் கூட வைத்திருப்பது நல்லது என்று தோன்றுகிறது.
செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா.....
(2007, 2009, 2010) விஜய் சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் இரண்டு முறைகள் (2011, 2012) தென் இந்திய பன்னாட்டு திரைப்பட விருதுகளையும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். தினமும் புது புது பாடலாசிரியர்கள் தோன்றும் இந்த காலத்தில் 2013 ல் 34 படங்களில் 106 பாடல்கள் எழுதிஇருப்பது இவரது திறைமைக்கு மேலும் பொலிவூட்டும் ஒரு பெரிய சாதனைதான்.
கடந்த காங்கிரஸ் மத்திய அரசால் திரைப்பட தயாரிப்புகளின் மேல் பல வகைகளில் போடப்பட்ட 12.5% சேவை வரி இந்த பட்ஜெட்டில் முழுமையாக நீக்க படும் அல்லது பெரிய அளவில் குறைக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். “மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய திரைப்பட தொழிலுக்கு சல்மான் கான், விஜய், பவன் கல்யான், ஹேமமாலினி போன்றோர்கள் நிவாரணம் பெற்று தர தவறி விட்டார்கள்” என்று சென்னையிலுள்ள முகேஷ் ரதிலால் மேஹ்த்தா என்று திரைப்பட தயாரிப்பாளர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக முந்திய பட்ஜெட்டில் சேவை வரி பற்றிய விவரம் தெரிந்த உடன் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை 7-2-2013 அன்று நடத்தினர். அதை தொடர்ந்து 23-2-2013 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொண்டனர். எந்த பயனும் கிடைக்க வில்லை. ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திரு நரேந்திர மோடி அவர்கள் திரைப்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நல்ல தொடர்பில் இருந்ததால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்தது.
|